பார்வதியுடனான பிணக்குகள் தீர்ந்து
மனம் குளிர்ந்திருந்த ஒரு பொழுதில்
வரம் கொடுக்க பூலோகம் வந்தார் சிவபெருமான்.
சந்தேக புத்தியுடைய மானிடன்
கடவுளை கடவுளென்று நம்ப மறுத்தான்.
வங்கிகடன் வாங்கிக் கொள்ளும்படி நிர்பந்திக்கிற
தொலைபேசி பெண்ணைப்போல
வரங்களை பெற்றுக்கொள்ளும்படி நிர்பந்தித்தார்.
"Bero pulling கொள்ளையன் தானே நீ" என்றது மானுட வர்க்கம்.
மறுக்கப்பட்ட வரங்களை பார்த்து
பரிகாசம் செய்தாள் பார்வதி.
கோபத்தில் கண்சிவந்த பரமன்
பிரபஞ்சம் அதிர தாண்டவம் ஆடினார்
பற்றி எரிந்தது பிரபஞ்சம்…
அண்ட சராசரங்களும் ஓலமிட்டன.
சகலமும், சகலரும் கருகும்படியாய்
தீயின் வெப்பத்தை அதிகபடுத்தினார் கடவுள்…
காயங்களோடு ஓடி வந்த குழந்தை கேட்டது…
"திருப்தியா?" "ஆம்" என்றார் சிவபெருமான்.
"நீ மிஞ்சி இருக்கும் பொது எல்லாவற்றையும்
அழித்துவிட்டதாய் எதற்கு இந்த ஆணவம்…
உன்னை நீ அழித்துக் கொள்ள முடியாமல்
நீ என்ன அழிக்கும் கடவுள்?".
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment