==================
பிரதான வீதியிலிருந்து பிடுங்கி
அடர்ந்த வனத்தில் வீசப்பட்டேன்.
பிரியத்தின் வாசனை மீது
அமிலம் பரவத் தொடங்கியது.
நிழல்களடர்ந்த எனது சாலையில் ...
நெருப்பின் தகிப்பு கவியத் தொடங்கியது.
மீள எத்தனித்தபோது
காலம்
ஒரு சாத்தானைப் போல கள்ளச் சிரிப்பு சிரித்தது.
பிறகு நான்
காலத்திற்கெதிரான வன்மத்தைப்
பருகத் தொடங்கினேன்.
பாதங்களை உதிர்த்துக் கொண்டேன்
விழிகளைப் பிடுங்கி வீசினேன்
உயிரை உருக்கும் ஒரு உன்னத இசைக்கு
செவிகளை மூடிக் கொண்டேன்...
இன்னும் நிறைய இதுபோல்.
பிரியத்தின் வாசனை பரவத் தொடங்கிவிட்ட
ஒரு மழை நாளில்
காலம் மீண்டும் கள்ளச் சிரிப்பு சிரித்தது.
எனது கோப்பையில்
அன்பை நிரப்பிக்கொண்டு இருக்கிறேன்.
பிரதான வீதியிலிருந்து பிடுங்கி
அடர்ந்த வனத்தில் வீசப்பட்டேன்.
பிரியத்தின் வாசனை மீது
அமிலம் பரவத் தொடங்கியது.
நிழல்களடர்ந்த எனது சாலையில் ...
நெருப்பின் தகிப்பு கவியத் தொடங்கியது.
மீள எத்தனித்தபோது
காலம்
ஒரு சாத்தானைப் போல கள்ளச் சிரிப்பு சிரித்தது.
பிறகு நான்
காலத்திற்கெதிரான வன்மத்தைப்
பருகத் தொடங்கினேன்.
பாதங்களை உதிர்த்துக் கொண்டேன்
விழிகளைப் பிடுங்கி வீசினேன்
உயிரை உருக்கும் ஒரு உன்னத இசைக்கு
செவிகளை மூடிக் கொண்டேன்...
இன்னும் நிறைய இதுபோல்.
பிரியத்தின் வாசனை பரவத் தொடங்கிவிட்ட
ஒரு மழை நாளில்
காலம் மீண்டும் கள்ளச் சிரிப்பு சிரித்தது.
எனது கோப்பையில்
அன்பை நிரப்பிக்கொண்டு இருக்கிறேன்.