Tuesday, October 21, 2008

மறதியும் அலுப்பும்



மழைக் காலங்களில் குடை மறந்து போவதற்காய் நானும்,

குடைக் காலங்களில் வர மறந்து போவதற்காய் மழையும்,

அலுத்துக் கொள்வதைப் போல,

எப்போதாவது பேச வாய்க்கிற தருணங்களில்

வார்த்தைகள் மறந்து போவதற்கு

நாம் ஏன் அலுத்துக் கொள்வதே இல்லை.