Friday, April 11, 2008

சமூகம்

துரோகம் வழியும் வார்த்தைகள்
சமூகத்தினுடையது.

உறங்கும்போது குறியறுத்துக்கொல்லும் குரூரமும்
சமூகத்தினுடையதுதான்.

சிசுக்களின் குருதி உறைந்த ஆடைகளை
அது தன் இருண்ட கிடங்குகளில்
வரிசைகிரமமாக அடுக்கி வைத்துக்கொள்கிறது.

சமூகம் எனப்படுவது யாதெனில்....

நாம்தான்.